முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர், ஆக.5- கட்டுமானம் உள்பட 17 முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கும் முத்தரப்புக் குழுக்கள் அமைக்கப்பட வும், சிஐடியுவிற்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் நட வடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பித்த மூன்று மாதத் திற்குள் பணப் பயன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முறைசாரா தொழி லாளர் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் வெண்ணமலையில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் அ.காதர்பாட்சா தலைமை வகித்தார். கரூர் நகர செய லாளர் ஆர்.ஹோச்சுமின் முன்னிலை வகித்தார். சிஐ டியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், செயலா ளர் சி.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். மாவட்ட நிர்வாகிகள் ராஜாமுகமது, கந்தசாமி, தண்ட பாணி, கிருஷ்ணமூர்த்தி, மதியழகன், பாலசுப்பிர மணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் ஊழல்
தரங்கம்பாடி, ஆக.5- மயிலாடுதுறை நகரப்பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்திருப்பதாக நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகைகளை வைத்து நகரவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் பொதுமக்க ளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முற்றிலும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் அதை சரி செய்வதற்கு பதிலாக அடிப்படை வசதி களுக்கான நிதிகளை கொள்ளையடித்து வரும் நகராட்சி நிர்வாகம் தற்போது நகரப்பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரியதாக மதிப்பீட்டு பலகைகளை வைத்துள்ள செயல் மக்களிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை வட்ட செயலாளர் மேகநாதன் கூறும்போது, மயிலாடுதுறை பகுதியில் குடிநீர் வசதிகள் முறையாக இல்லை, நாள்தோறும் ஆபத்தான பள்ளங்களை ஏற்படுத்தும் சாலைகள், சுகாதாரமற்று கிடக்கும் பேருந்து நிலையங்கள் என ஏராளமான அவலங்கள் நகரம் முழுவதும் உள்ள நிலையில் நகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு பதிலாக வரி வசூல் செய்வதிலும், மக்களுக்கான நிதிகளை கொள்ளையடிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது நகரப்பகுதியில் உள்ள குளங்களை மழைநீர் சேக ரிப்பு திட்டம் 2019 கீழ் தூர்வாரி விட்டதாக வெறும் அறிவிப்பு பலகை களை மட்டும் வைத்து கொள்ளையடித்துள்ளார். குறிப்பாக நீதிமன்றம் அருகேயுள்ள அங்காளம்மன் குளத்தை 2 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி யதாக பலகையை நகராட்சி நிர்வாகத்தினர் வைத்துள்ளனர். உட னடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேகநாதன் கூறியுள்ளார்.