கரூர்:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில அளவிலான மத்தியசெயற்குழுக் கூட்டம் கரூரில் உள்ள நாரதன சபா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலதலைவர் கு. குமரேசன் தலைமை வகித்தார். மாநிலச்செயலாளர் எம்.எஸ்.அன்பழகன் வரவேற்று பேசினார்.மாநில பொதுச் செயலாளர் எம்.பி.முருகையன் எதிர்கால அறிக்கையை சமர்ப்பித்து சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் வெ.சோமசுந்தரம் நன்றி கூறினார்.வருவாய்த்துறையின் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். நீதிபதி முருகேசன் மற்றும் சித்திக் குழு அறிக்கைகளை பேச்சுவார்த்தை அடிப்படையில் அமல்படுத்திட வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உடனடியாக நிவாரணம், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை ஒரே அரசாணையில் பணிவரன்முறை செய்து ஆணையிட வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். ஜாக்டோ - ஜியோவின ரின் துறைவாரி குற்றவியல் நடவடிக்கை களை உடனடியாக சரி செய்து 11 நாட்கள் போராட்ட காலத்தை பணிக்காலமாக வரன்முறை செய்ய வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஒருங்கிணைந்தபணி முதுநிலை நிர்ணயம் தொடர்பாகவருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து அரசு மட்டத்தில் தெளிவுரை வழங்க வேண்டும். உள்வட்ட துணை வட்டாட்சியர் பணியிடம் ஏற்படுத்துவது, மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய உள்வட்டங்கள் ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை சிறப்பு பணியிடங்கள், நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடங்கள் ஏற்படுத்திட வேண்டும். பட்டதாரி அல்லாத பதவி உயர்வு அலுவலர்களின் பதவி உயர்வினை உறுதி செய்து அரசாணை வெளியிட வேண்டும். வருவாய்த்துறையில் பணி நியமனம், பதவி உயர்வுக்கு டிபிசி குழுவிலிருந்து விலக்கு அளித்து அரசாணைவெளியிட வேண்டும். ஐஎப்ஹச்ஆர் எம்எஸ் (IFHRMS) குறைபாடுகளை சரிசெய்வதோடு, திட்டத்தை அமல்படுத்தகால அவகாசம் வழங்கிட வேண்டும்.இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் விதித்திருத்தம் ஏற்படுத்தி தனி விதி தொகுதி ஏற்படுத்தவேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் குடும்ப நல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் அக்.21முதல் மாநில நிர்வாகிகள் பங்கு கொள்ளும் விரிவான பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும், தமிழகத்தில் அனைத்து வருவாய்த் துறை அலுவலர்கள் அக்.20 அன்றுமாலை ஒரு மணிநேரம் வெளிநடப்பு செய்து மாவட்ட மற்றும் வட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.இரண்டாம் கட்டமாக நவ.5 அன்றுஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள், துறை தலைவரான வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், மூன்றாம் கட்டமாக நவ.25, 26 இரண்டு நாட்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 12 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.