கரூர் அருகே சென்று கொண்டிருந்த ஆம்புலன்சில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரவக்குறிச்சி அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. என்ஜினில் தீப்பிடித்தவுடன் நோயாளி மற்றும் உடன் வந்த 5 பேரும் உடனடியாக கீழே இறங்கினர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. உடனே கீழே இறங்கியதால் சேதம் தவிர்க்கப்பட்டது.