நாகர்கோவில், ஜுன் 14- நாகர்கோவில் அருகே கடத்த முயன்று 2 டன் ரேசன் அரிசியுடன் சரக்கு வாகனம் பறி முதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை பறக்கும் படையினர் வெள்ளியன்று அதி காலை நாகர்கோவில் பகுதியில் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பார்வதிபு ரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த டார்பாளால் மூடப்பட்ட வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது அதில் சுமார் 2000 கிலோ பொது வினியோக திட்ட ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட முயன்ற ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். அதில் அரிசியை கேரளாவிற்கு கடத்திச் செல்ல கொண்டுவரப்பட்டதாக தெரிய வந்தது. வாகனமும் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டி வந்த நபரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்ப ட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.