tamilnadu

img

பாதிப்பின் பிடியில் தேன் தொழில் தேனீ விவசாயிகளின் குரலை மதிக்குமா அரசு நிர்வாகம்?

நாகர்கோவில், ஜூன் 4- கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 2500 பேர் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் தேன் தொழில் செய்து வருகின்றனர். இதில் 15000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். தற்போது கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கேரளா மற்றும் கர்நாடக மாநி லங்களுக்கு சென்று தொழிலை  பராமரிக்க முடியாத சூழ்நிலை யில், அவர்கள் பெரும் இழப்பில் உள்ளனர். இது குறித்து கோவிட் 19 பாதுகாப்பு விதிமுறைகளுக் குட்பட்டு தேன் சேகரிப்பு தொழிலை நடத்த மாவட்ட நிர்வாகத்திடமும் அரசிடமும் கன்னியாகுமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங் கம் சார்பில் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே கேரளா மற்றும் கர் நாடகா மாநிலங்களில் உள்ள தேனீ கூடுகளை பராமரிப்பதற் காக அந்தந்த பகுதிகளில் சென்று தங்கி தொழில் செய்வதற்கான அனுமதி பெற்றுத்தர வலியுறுத்தி யும், கேரளாவில் சேகரித்த தேனை குமரி மாவட்டத்திற்கு கொண்டு வர அனுமதி அளித்தது போல கர்நாடகாவில் இருந்தும் சேக ரித்த தேனை கொண்டு வர அனு மதிக்க வேண்டும் எனவும், குமரி மாவட்ட தேனீ விவசாயிகள் சேக ரித்த தேன் அனைத்தும் மார்த்தாண் டம் தேனீ வளர்ப்பு கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்யவும் தேவையான நிதி மற்றும் பாது காப்பு பெட்டக வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங்கம் சார்பில் வியாழனன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, கன்னி யாகுமரி மாவட்ட தேன் சேக ரிப்போர் சங்க செயலாளர் ஜூடஸ் குமார் தலைமை வகித்தார். முன்  னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின் பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் ஆர்.செல்லசுவாமி, கன்னியா குமரி மாவட்ட தேன் சேகரிப் போர் சங்க தலைவர் எஸ்.சிதம் பர கிருஷ்ணன், சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரன், மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், மீன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.லீமா றோஸ் உட்பட தேன் சேகரிப்போர் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், 70 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.