கோவிட் எச்சரிக்கை- ஊரடங்கு காரணமாக வேலையும் வருமானமும் இல்லாமல் தவித்த ஏழை மக்களுக்கு குமரி மாவட்டம் குலசேகரம் வட்டாரம் மாடத்துகோணம் பகுதியில் சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், எஸ்.ஆர்.சேகர், வட்டார செயலாளர் பி.விஸ்வாம்பரன், சமூக ஆர்வலர் எஸ்.ராமராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.