tamilnadu

பாலியல் வல்லுறவால் சிறுமி தற்கொலை 2 வாலிபர்கள் மீது எஸ்பியிடம் தாயார் புகார்

நாகர்கோவில், ஜூன் 8-  ஆரல்வாய் மொழி அருகே 2 வாலிபர்களால் பாலியல் வல்லுறவு செய்யப் பட்ட தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக தாயார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குமரி  மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே அழகிய நகர் பகு தியை சேர்ந்தவர் கலா  மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனு வில் கூறியிருப்பதாவது: நான் ஆரல்வாய்மொழி பகுதியில்  எனது கணவர் மற்றும் மக ளுடன் வசித்து வந்தேன். நாங்கள் கிழங்கு வியாபாரம் செய்து வந்தோம். எனது 15 வயது மகள் கவுசல்யா ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்ப தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3  ஆம் தேதி மாலை 5 மணி அள வில் எனது மகள் கவுசல்யா விஷம் குடித்து வாந்தி எடுத் தார். அவளிடம் விசாரித்த போது இரண்டு பேர் தன்னி டம் தவறாக நடந்து கொண்ட தாக என்னிடம் கூறினார்.

இதனால் பயந்து போன நான்  இதுகுறித்து எனது கணவ ரிடம்  தெரிவிக்காமல் ஆசாரி ப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு சிகிச்சை பலனின்றி கௌசல்யா இறந்துவிட்டார். இந்த வழக்கில் காவல் துறையினர், எனது மக ளுக்கு செல்போன் வாங்கிக்  கொடுக்காததால் தற்கொ லை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள் ளனர்.  ஆனால் எங்கள் ஊரைச்  சேர்ந்த மகேஷ் மற்றும் முகேஷ் ஆகிய இரண்டு வாலிபர்களும் சேர்ந்து எனது மகளை மிரட்டி பாலி யல் வல்லுறவு செய்துள்ள னர். இதன் காரணமாகவே எனது மகள் தற்கொலை செய்து உள்ளார். எனவே  எனது மகளின் தற்கொ லைக்கு காரணமாக இருந்த  இரு நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.