tamilnadu

கால்வாயை தூர்வாரி வெள்ளப் பெருக்கை தடுத்திடுக!

நாகர்கோவில், ஆக.29- தர்மபுரம் பகுதியில் உள்ள பெருங் குளத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்க ளில் வெள்ள பெருக்கை தடுக்கவும் பெருங்குளத்திலிருந்து சம்பகுளத்திற்கு செல்லும் புறக்கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்யவும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுப் பணித்துறை செயற்பொறியாளருக்கு அளித்துள்ள மனு விபரம் வருமாறு, அகஸ்தீஸ்வரம் தாலுகா தர்ம புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருங் குளம், பேச்சிப்பாறை அணை தண்ணீ ரால் நிரப்பப்படுகிறது. குளம் நிரப்பப் பட்டவுடன் மதகு அடைக்கப்பட்டாலும் அருகிலுள்ள வெள்ளாளன்விளை கிராமத்தை சேர்ந்த சிலர் மீண்டும் திறந்து விடுகின்றனர். அதனால் குளம் மறுகால் பாய்ந்து அருகிலுள்ள நிலங்க ளை சூழ்ந்து தென்னை வாழை பயிர்க ளை அழித்து வருகிறது. மேலும் எந்தவித சாகுபடியும் செய்ய முடியாமல் உள்ளது. இந்த நிலை ஒவ்வொரு வருடமும் தொடர்கிறது.  குளத்திலிருந்து மறுகால் சம்ப குளத்திற்கு செல்ல புறக்கால்வாய் ஒன்று உள்ளது. ஆனால் இந்தக்கால்வாய் புல் பூண்டுகள், குப்பைகள் நிரம்பி தூர்ந்துள்ளது. எனவே இந்த புறக்கால் வாயை தூர்வாரவும், விவசாய நிலங்க ளில் நிரம்பியுள்ள தண்ணீர் வெளியேற தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் குளத்தின் நீர் அனுமதியின்றி திறக்கப் படுவதை தடை செய்ய உரிய நடவடிக்கை கள் எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட் டுள்ளது. மனுவை மாவட்டச் செயலாளர் ஆர்.ரவி, தலைவர் சைமன் சைலஸ் உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் அளித்தனர்.