tamilnadu

img

சிபிஎம் மூத்த தலைவர் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவுதினம்

நாகப்பட்டினம், ஆக.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய இயக்கத்தின் மூத்த  தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் தலை ஞாயிறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந் தலைவருமான தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி அவர்களின் 23-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம், பாங்கல் கிராமத்தில் ஆகஸ்ட் 19 புதனன்று நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் நடைபெற்ற நினைவுதின நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைஞாயிறு ஒன்றியச் செய லாளர் ஏ.வேணு தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் நாகை மாலி, தோழர் பி.எஸ்.டி. நினைவிடத்தில் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, புகழுரையாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம்,  மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், கட்சி யின் திருவாரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.என். முருகானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

;