tamilnadu

காய்கறி கடையிலிருந்து  ரூ.17 லட்சம் கொள்ளை

நாகர்கோவில், ஜூன் 2- கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் நாகராஜா கோவில் பகுதியில் காய்கனிகள் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வடக்கு சூரங்குடி யை சேர்ந்த சிவகுமார் என்பவரால் நடத் தப்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் வெளி ஊர்களில் இருந்து காய் கனிகள் கொண்டு வரபட்டு உள்ளூர் வியாபாரிகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வழக்கம் போல் திங்க ளன்று இரவு நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். செவ்வா யன்று காலையில் வந்து பார்க்கும் போது நிறுவனத்தின் ஷட்டர் பூட்டுகள் உடைக் கப்பட்டிருந்தன. கடை உள்ளே சென்று பார்த்த போது மர்ம ஆசாமிகள் கடைக் குள் நுழைந்து அலுவலகத்தில் இருந்த ரூ.17 லட்சத்தை கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி காவல் துறையினர் அலுவல கத்தில் தடயங்களை சேகரித்து விசா ரணை செய்து வருகின்றனர். நள்ளிரவில் பூட்டை உடைத்து 17 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்த சம்பவம் இப் பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது. கொள்ளை நடந்த நள்ளிரவில் இரண்டு மணி நேரம் மின் தடை இருந்த தும் குறிப்பிடத்தக்கது.