tamilnadu

55 வயதானால்  ஊரக வேலை மறுப்பு?

நாகர்கோவில், ஆக.3- பள்ளம் ஊராட்சியில் 55 வயதுக்கு மேலான ஊரக தொழிலாளர்களுக்கு வேலை அல்லது வேலைக்கான ஊதியத்தை நிவாரணமாக வழங்கிட வலியுறுத்தியும், பள்ளம் ஊராட்சி ஊரக வேலைத் திட்டத்தில் ஒரு மாத காலமாக வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது.