tamilnadu

img

காட்டு மிருகங்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பு கூட மக்களுக்கு இல்லை பேச்சிப்பாறையில் மக்கள் கதறல்

அருமனை, ஆக.25- கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 50 ஆண்டு களுக்கு மேலாக தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா மகன், மகளுடன் கூட்டாக வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி அப்பகுதியில் வசித்து வந்த னர். அத்தகைய குடும்பங்கள் வசித்த 40-க்கு மேற்பட்ட வீடு களையும் தேவாலயத்தையும் அகற் றும் நோக்கத்துடன் மாவட்ட நிர்வா கம் பேச்சிப்பாறையில் குவிந்தது. அன்றைய தினம் குமரி மாவட் டத்தின் மக்கள் பிரதிநிதிகள் முன் னாள் மக்கள் பிரதிநிதிகள் அரசி யல் கட்சி பாகுபாடின்றி பேச்சிப் பாறையில் குவிந்தனர். அதிகாரி களுடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

மறியல் போராட்டம்
மாவட்டத்தின் மக்கள் பிரதி நிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சட்டமன்ற உறுப்பினர் நாடாளு மன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மக்க ளோடு இணைந்து மறியல் போராட் டம் நடத்தினார்கள். இப்போராட் டம் பல மணி நேரம் தொடர்ந்தது. பிறகு நாளை பேசி முடிவெடுப் போம் என்று கூறியதின்படி ஆகஸ்ட் 19ஆம் தேதி போராட்டம் ஒத்திவைக் கப்பட்டது. மறுநாள் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை. ஆனால் மாவட்ட நிர்வாகம் 20ஆம் தேதி மின்சாரம் துண்டிக்க முனைந்த தாக பொதுமக்கள் கூறினர். 21ஆம் தேதி காலையில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதி யில் பதட்டம் ஏற்படுத்தப்பட்டு மக்க ளின் உடைமைகளை அகற்ற கூட அவகாசம் கொடுக்காமல் 60 ஆண்டு களுக்கு மேலாக உழைத்த உழை ப்பை ஒருசில மணி நேரத்தில் தரை மட்டம் ஆக்கினர். பொதுமக்கள் கதறினார்கள். ஈவு இரக்கமின்றி மாட்ட நிர்வாகம் ‘இடிப்பு’ வேலை யை நடத்திமுடித்தது.
மாற்று இடம்
வீடு இடிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறிய தன் விளைவாகவும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் தமிழக முதலமைச்சர் ஊராட்சியில் 4 சென்று நிலம் வீடு கட்ட கொடுக்க வாக்குறுதியளித்தார். அதன் பெய ரில் பேச்சிப்பாறை பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் பின்பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக அரசு அனு மதி பெறாமல் குடியிருந்துவரும் 36 வீடுகள் உள்ளதாக மக்கள் தெரி வித்தனர். இந்த வீடுகளில் இந்நாள் வரையிலும் மின்சாரமோ, கரத் தீர்வையோ இல்லை என தெரிகி றது. ஆனால் அனைத்து வீடுகளி லும் மக்கள் குடியிருந்து வருகின்ற னர். இவ்வீடுகள் அனைத்தும் பல லட்சம் செலவில் கட்டப்பட வீடுகள் ஆகும். அப்பகுதியில் இத்தகைய வீடுகள் கட்டும்போது அதிகாரிகள் கட்டக்கூடாது என கூறியிருந்தால் கட்டியிருக்க மாட்டோம் என்று மக் கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இப்பகுதியில் உள்ள 10 க்கு மேற் பட்ட வீடுகளை இடித்து அவ்வீட்டில் குடியிருந்தவர்களை விரட்டிவிட்டு பேச்சிப்பாறை சீறோபாயின்டில் வீடிழந்தவர்களுக்கு தலா 3 சென்ட் நிலம் அளந்து கொடுத்துள்ளனர். சில பகுதிகளில் குடியிருக்கும் வீட் டின் கழிவறையை இடித்து அளந்து கொடுத்துள்ளனர். இதனால் அதி கம் பெண்கள் குழந்தைகள் வசிக் கும் இப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு பாதிப்பு
தற்போது பேச்சிப்பாறை சீறோ பாயின்ட் என்னும் பகுதி விளவங் கோடு தாலுகா களியல் வருவாய் கிராமம் ஆகும். இப்போது அரசு வசிக்க இடம்கொடுத்துள்ள பகுதி திருவட்டார் தாலுகா திற்பரப்பு வரு வாய் கிராமம் ஆகும். எனவே அப் பகுதியிலிருந்து குடியேற உள்ள மக்களுக்கு அனைத்து ஆவ ணங்களிலும் முகவரிகள் மாற்றம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும் பாதி ப்பு ஏற்பட்டுள்ளது. சீறோபாயிண் டில் வசித்த மாணவ மாணவி களை கடையல், களியல், அரு மனை மார்த்தாண்டம் கல்வி நிலை யங்களில் பயின்று வந்துள்ளனர். ஆனால் தற்போது போக்குவரத் துக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆலயங்கள் அகற்றம்
சீறோபாயின்டில் கிறிஸ்தவ ஆலயங்கள் அகற்றப்பட்டது. இவ்வாலயத்தில் ஒன்றில் போதகர் ஒருவர் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். ஆலயம் இடிக்கப்பட்ட போது அவரது குடும்பம் தெரு வுக்கு வந்தது. தற்போது கொடுத் துள்ள குடியிருப்பில் ஒரு கட்டிடம் கட்டி வந்தார் அந்த கட்டிடத்தையும் இடித்துவிட்டது, மாவட்ட நிர்வாகம். தற்போது அந்த போதகரும் குடும்பமும் வாடகைக்கு கூட வீடு கிடைக்காமல் கண்ணீர் விடுகின்ற னர்.
மக்கள் கோரிக்கை
தமிழக அரசும் மாவட்ட நிர்வாக மும் உடைமைகளை இழந்து நிற் கும் எங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பான வீடு கட்டித் தரவேண்டும். சுத்தமான குடி நீர், மின் இணைப்பு வழங்க வேண்டும். பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு சீரான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். எங்களுக்கு உள்ள அனைத்து ஆவணங்களிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் முகவரி களை மாற்றித்தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். தற்போது அளந்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் தற் காலிக தார்பாள் கூரை அமைத்து வருகின்றனர்.

வாடகைக்கு வீடு இல்லை
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உட னடியாக குழந்தைகளுடன் குடி யேற தற்காலிக வாடகைக்கு வீடு கள் கூட கிடைக்கவில்லை. அப் பகுதியில் சுமாராக வீடுகள் இருந் தால் ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மாத வாடகை கேட்கின்றார் கள். இது சாதாரண மக்களுக்கு சாத்தியம் இல்லை. இதனால் சாதா ரண மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட ஒரு முதியோர் மலையாளத்தில் “பாம்புகளுக்கு வான முண்டு பறவைகளுக்கு ஆகா சம் உண்டு மனுஷ புத்திரனுக்கு தலை சாய்க்க மண்ணில் இடம் இல்லா...” என்று கூறி அழத் துவங்கினார்.

படமும் செய்தியும் பி.ரமேஷ், சதீஷ்