tamilnadu

img

மூன்று மாதமாக சம்பளம் தராத நாகம்மாள் மில் கோவிட்டை சாதகமாக்கி தொழிலாளர் விரோத நடவடிக்கை

நாகர்கோவில், ஜூன் 20- கோவிட்டை சாதகமாக்கி தொழி லாளர் விரோத நடவடிக்கைகளை நாகர்கோவிலில் உள்ள நாகம்மாள் மில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மூன்று மாதங்களாக தொழிலாளர்க ளுக்கு சம்பளம் தராததுடன் அவர்க ளை சட்ட விரோதமாக வெளியேற்ற வும் முயன்று வருவதாக சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து குமரி மாவட்ட மில் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் சனியன்று அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் செயல்பட்டு வரும் நாகம்மாள் மில் 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஆலை தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி யது. இதனால் தொழிலாளர்கள் வேலையில்லாமல் வருமானமின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்த சம்பள மும் வழங்கப்படவில்லை.

கோவிட் 19  ஊரடங்கு தளர்வுக்கு பின் 50 சத வீதம் தொழிலாளர்களை வைத்து நூற்பாலைகளை இயக்கலாம் என அரசு அறிவித்த பிறகும் ஆலை நிர்வா கம் சட்டவிரோதமாக ஆலையை மூடி வைத்து தொழிலாளர்களுக்கு சட்ட விரோதமாக வேலை மறுக்கப்பட்டு வருகிறது. ஆலையில் வேலை பார்த்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வரும் தொழிலாளர்கள் மிகவும் வறுமை யில் உள்ளனர்.  கடந்த 3 மாதங்களாக ஆலை  நிர்வாகம் எந்தவித ஊதியமும் தொழி லாளர்களுக்கு வழங்கவில்லை. இந்நிலையில் தொழிலாளர்களின் வறுமை நிலையை தனக்கு சாத கமாக பயன்படுத்தி ஆலை நிர்வாகம் ஆசை வார்த்தைகளை கூறியும், வற்புறுத்தியும் சட்டவிதிகளுக்கு புறம்பாக தொழிலாளர்களிடம் ராஜி னாமா கடிதங்களை பெற்று வருகிறது.

எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உடனே ஆலையை திறந்து அனைத்து தொழிலா ளர்களுக்கும் வேலை வழங்கிடவும், ஆலை நிர்வாகத்தின்  சட்டவிரோத நடவடிக்கைகளை கைவிடவும், வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு முழு சம்பளம் வழங்கவும், தொழி லாளர்களை நிர்பந்தித்து ராஜினாமா கடிதம் பெறுவதை தடுத்திடவும் சுமூக மான தீர்வை ஏற்படுத்தி தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமோகன் தலை மையில், சிஐடியு பஞ்சாலை சம்மே ளன மாநிலப் பொருளாளர் எஸ்.சக்திவேல், மாவட்டச் செயலாளர் மாணிக்க வாசகம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.