நாடு முழுவதும் கொரோனா தொற்று ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், ஐசிடிஎஸ், ஆஷா தொழிலாளர்கள், உள்ளாட்சி ஊழியர்கள், தூய்மை தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு கேரள அரசைப் போன்று, மத்தியஅரசு ஒரு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவது, தொழிலாளர் சட்டங்களை மூன்றாண்டுகளுக்கு செல்லாதாக்கவும், தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் தமிழகம் முழுவதும் வியாழனன்று (மே 14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடமாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள்.