tamilnadu

குமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரம்

நாகர்கோவில், செப்.2- குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை மேலும் வலுத்துள்ளது. ஞாயிறன்றுகாலை முதல் மாவட்டம் முழு வதும் மழை பெய்தபடி இருந்தது. மாலையில் மழையின் வேகம் மேலும் அதிகரித்தது. இரவு முதல் இது கனமழையாக மாறி விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான மார்த்தாண் டம், குலசேகரம், திற்பரப்பு, கருங்கல், தக்கலை, இரணியல், குளச்சல் போன்ற பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக குழித்துறை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல திற்பரப்பு அருவியிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டியது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் மழை காரண மாக சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. விடிய, விடிய பெய்த மழை திங்களன்று காலை யும் நீடித்தது. திங்களன்று கனமழை பெய்ததால் நகரின் முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள்  கடும் சிரமத்துடனேயே கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்திலேயே அதிக பட்சமாக மயிலாடி யில் 80.2 மி.மீ. மழை பெய்து உள்ளது.  ஏற்கனவே பெய்த மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள குளங்கள் போன்ற நீர்நிலைக ளுக்கு தண்ணீர் வந்தபடி இருந்தது. ஞாயிறன்று இரவு முழுவதும் பெய்த மழையால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் அனைத்து குளங்களும் நிரம்பி வருகிறது. இது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதேப்போல குமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு போன்ற அணை பகுதிகளிலும் மழை பெய்து உள்ளதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. திங்கள் காலை நிலவரப்படி பெருஞ்சாணி அணையில் 58.80 அடி தண்ணீர் உள்ளது. அணை க்கு 387 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கி றது. பேச்சிப்பாறை அணையில் 14.80 அடி தண்ணீர் உள்ளது. 851 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. சிற்றாறு-1 அணையில் 11.64 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 89 கனஅடி தண்ணீர் வரு கிறது. அதே போல சிற்றாறு-2 அணையில் 11.74  அடி தண்ணீர் உள்ளது. 134 கனஅடி தண்ணீர் அணைக்கு வருகிறது. பொய்கை அணையில் 6.90 அடி தண்ணீர் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையில் 35.60 அடி தண்ணீர் உள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் உள்ள அணை கள் மூடப்பட்டு உள்ளது. ஞாயிறன்று பேச்சிப் பாறை அணையில் இருந்து 689 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. திங்களன்று அந்த அணையும் மூடப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையில் இருந்து மட்டும் 50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  மாவட்டம் முழுவதும் திங்கள் காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு, நாகர்கோவில்-63.7, கொட்டாரம் -72, இரணி யல்- 21, ஆனைக்கிடங்கு-44.2, குளச்சல்-24.4, அடையா மடை-14, கோழிப்போர் விளை-45, முள்ளங்கினா விளை-30, பூதப்பாண்டி- 25.4, சுரு ளோடு-10, மாம்பழத்துறையாறு-61, கன்னிமார்-16.4, ஆரல்வாய் மொழி-19, பாலமோர்-37.2, திற்பரப்பு-23.4.