tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்

நாகர்கோவில், ஜுலை 1- பெட்ரோல், டீசல் விலை உயர்வு ரத்து செய்ய வேண்டும், கோவிட் 19 தொற்று ஊரடங்கு கால நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நாகர்கோவில் செட்டிக் குளம் சந்திப்பில் செவ்வாயன்று நடை பெற்றது.  செட்டிகுளம் சந்திப்பில் நடந்த இயக்கத்தி ற்கு மாநகரக்குழு உறுப்பினர் பி.ராஜநாயகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ. உசேன், ஓய்வு பெற்ற ஆசியரியர் குழு செயலாளர் பேராசிரியர் மனோகர் ஜஸ்டஸ், சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க செயல் தலைவர் எம்.லட்சுமணன், சிபிஎம் மாநகர செயலாளர் கே.மோகன், கிளை செயலாளர் ஆர்.ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;