tamilnadu

போலி இ-பாஸ் தயாரித்து பயணிகளை அழைத்து வந்த கார் ஓட்டுநர் குமரி மாவட்ட எல்லையில் கைது

நாகர்கோவில், ஜூன்.15- கோவிட் 19 தொற்று பரவலை தடுக்க அரசு  பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக, நெருங்கிய உறவினர்கள் திரு மணம், மரணம் உள்ளிட்ட சில அவசர தேவைக ளுக்கு மட்டும் இ - பாஸ் வழங்கி வரு கிறது. ஆனால் நோய் தொற்று குறித்து கவலை படாமல் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் பல்வேறு தரப்பினர் விதி முறைகளுக்கு அப்பாற்பட்டு போலி இ - பாஸ் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன்படி இ  - பாஸ் பெற அரசு அலுவலகம் செல்ல தயங்கும் பொதுமக்கள் இதற்காக தனியார் வாகன ஓட்டுனர்களை நாடு கின்றனர். தனியார் வாகன ஓட்டுநர்கள் போலி  பாஸ் தயாரித்து பயணிகளை அழைத்து வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் போலி இ - பாஸ் தயாரித்து சென்னையிலிருந்து கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு 5 பயணிகளை வாட கை காரில் ஏற்றி வந்த செங்கல்பட்டு மாவ ட்டத்தை சேர்ந்த விக்னேஷ் (28), என்பவரை அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்  வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். போலி பாஸ் தயாரித்த வாகன ஓட்டுநர் மீது  வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையி னர் வாகன ஓட்டுநர் மற்றும் காரில் வந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்களை கோவிட் 19 பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.