tamilnadu

புற்று நோய் தாக்கம் நிறைந்த பகுதி குமரி இயற்பியலாளர்கள் சங்க மாநாட்டில் தகவல்

நாகர்கோவில், செப்.8- தமிழ்நாடு புதுச்சேரி மாநில இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்கத் தின் 23 ஆவது மாநாடு கன்னி யாகுமரியில் தொடங்கியது. மாநாட்டிற்கு, சங்க மாநில தலைவர் பி.காளியப் பன் தலைமை வகித்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் துவக்கி வைத்தார். மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பி யலாளர்கள் சங்கத்தின் தலை வர் பி.காளியப்பன் பேசுகை யில், நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 15 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப் படுகின்றனர் . இந்த எண்ணிக் கையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் புற்று நோய் பாதிப்பு குறைவாகும்.  குமரி மாவட்டம், இயல் பாகவே புற்று நோய் தாக்கம் நிறைந்த பகுதியாகும். ஏனெனில், இங்குள்ள கடல் பகுதி மணலின் கதிர்வீச்சு  தாக்கத்தால் புற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஆங்கி லேயர் காலத்திலேயே குமரி மாவட்டம் நெய்யூரில் புற்றுநோய் பாதிப்பு சிகிச் சைக்கு என்று மருத்துவ மனை உருவாக்கப்பட்டது. பிறக்கும் குழந்தைக்கும் புற்று நோய்பாதிப்புகள் உள்ளன. இருப்பினும் இவற்றுக்கு சிகிச்சை அளிக்க முடியும். புற்று நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முழுமையாக குணமடையும் வாய்ப்புள்ளது. தற்போது புற்றுநோய் பாதிப்பு என்றால் மக்களிடையே அச்சம் ஏற்படுவதோடு, அதற்கான சிகிச்சை குறித்த விழிப்பு ணர்வு குறைவாகத்தான் உள்ளது. புற்று நோயாளிகள் முறையாக மருந்துகளை உட்கொண்டால் அந்த நோயில் இருந்து முழுமை யாக குணமாகலாம். தற்போது நவீன தொழில் நுட்பங்கள் மூலம் புற்று நோய் செல் களை எளிதில் கண்டறிந்து, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடையலாம் என அவர் பேசினார்.  இ ந் த மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரியின் இந்திய மருத்துவ இயற்பி யலாளர்கள் சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார், அமைப்பு செயலாளர் கிங்ஸ்டன் விஜய் உட்பட 50 க்கும் மேற்பட்ட மருத்துவர் கள் கலந்து கொண்டனர்.