tamilnadu

கன்னியாகுமரி, தேனி முக்கிய செய்திகள்

தொடர் மழையால் 2 வீட்டுச் சுவர்கள் இடிந்தன
குலசேகரம், அக்.13-குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால் கூலித் தொழிலாளிகள் இருவரின் வீட்டுச் சுவர்களும், புற்று நோய் சிகிச்சை மையத்தின் சுற்றுச் சுவரும் இடிந்து விழு ந்தன. குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளான மலையோ ரங்களிலும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில  நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ரப்பர் பால்வடிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்க ப்பட்டுள்ளன. குலசேகரம் அருகே கரைக்காடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி புஷ்பராஜ் (52). இவரது வீட்டுச்  சுவர் ஞாயிற்றுக்கிழமை காலையில் இடிந்து பக்கத்திலுள்ள பிரான்சிஸ் என்பவரின் வீட்டுச் சுவர் மீது விழுந்தது. இதில் இரு வரின் வீட்டுச் சுவர்களும் சேதமடைந்தன. முன்னதாக வீட்டி லிருந்தவர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்ததால் காயமின்றி  தப்பினர். இதுபோல் குலசேகரம் அருகே அரமன்னம் பகுதி யில் உள்ள புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரண சிகிச்சை மையத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இருசக்கர வாகன  விபத்தில் இருவர் பலி
நாகர்கோவில், அக்.13- நாகர்கோவில் பார்வதிபுரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த வர் நடராஜன். இவரது மகன் லெட்சுமணன், (23). இவர், வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். சனிக்கிழ மை இரவு லெட்சுமணன், நாகர்கோவில் கட்டையன்விளை யைச் சேர்ந்த தனது நண்பர் விஜய் (17) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு சென்றனர். தோவாளை ஆற்றுப் பாலம் அருகே உள்ள வழிச்சேரி  இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே சரிந்தது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களுக்கு தலை  மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி யது. சிறிது நேரத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும், ஆரல்வாய் மொழி காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து உற வினர்களிடம் ஒப்படைத்தனர்.

சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்
கடமலைக்குண்டு,அக்.13- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான விவசாயப் பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் உள்ள வீட்டின் முன்பாக வளர்க்கப்பட்டு வந்த இரண்டு சந்தன மரங்க ளில் ஒன்றை கடந்த மாதம் மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி இரவு பண்ணை வீட்டில் இருந்த மற்றொரு சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தினர். இதுதொடர்பாக பண்ணையில் பணி யாற்றும் பூபதிராஜா நேற்று மயிலாடும்பாறை காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.