tamilnadu

சாதியைக் கூறி தொழிலாளர்களுக்கு அவமதிப்பு: போக்குவரத்து மேலாளர் மீது வழக்கு

நாகர்கோவில், ஆக.22- சாதியைக் கூறி தொழிலாளர்களை அவ மதித்த அரசு போக்குவரத்து கழக அதிகாரி மீது தொடர் போராட்டங்களின் விளைவாக 161 நாட்க ளுக்கு பிறகு தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் அரசு போக்குவரத்துக் கழகம் ராணி தோட்டம் பணிமனையில் கிளை-2 மேலா ளராக இருப்பவர் பெருமாள். இவர் தனக்கு கீழ் பணியாற்றும் தலித் ஓட்டுனர், நடத்துநர் மற்றும் பணியாளர்களை சாதி ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தொழிலா ளர்கள் புகார் தெரிவித்தனர்.  கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவர் தனக்கு கீழ் பணியாற்றும் தலித் ஓட்டுனர் ஒருவரை சாதி பெயரை கூறி திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து அவர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து பெருமாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டங்கள் நடை பெற்றன. பலகட்ட போராட்டங்கள் நடத்திய நிலை யில் 161 நாட்களுக்குப் பிறகு காவல் துறையினர் தற்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதன்படி ஆசாரிபள்ளம் காவல் துறையினர் ராணி தோட்டம் கிளை 2 மேலாளர் பெருமாள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.