tamilnadu

கடும் விலை வீழ்ச்சி: குமரி ரப்பர் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்

நாகர்கோவில், ஆக.31- பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயம் மிகவும் இன்றியமையாத ஒன்று. பல்லாயிரக்கணக்கான விவசாய மக்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் ரப்பர் விவ சாயத்தை மட்டுமே நம்பி தங்கள் வாழ்வை நகர்த்தி வருகின்றனர்.  தற்போது ரப்பர் விலையானது மிகக் கடுமையான முறையில் வீழ்ச்சியைக் கண்டு வருவது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இந்த வீழ்ச்சியை உடனடியாக தடுத்து நிறுத்தும் வண்ணம் டயர் தொழிற்சாலைகளையும், ரப்பர் கொள்முதல் நிறுவனங்களையும் அழைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலையை நிர்ணயித்தும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு வரிச்சலுகைகள் அளித்தும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் இயற்கை ரப்பர் சார்ந்த சிறு குறு தொழில்களை மாநில அரசு ஊக்குவித்து, அதற்கு பயிற்சி அளித்து, தொழில் தொடங்க ஊக்கம் அளிக்கும் வகையில் மானியத்து டன் கூடிய கடனுதவி அளிக்க வேண்டும். அதேப் போன்று மத்திய அரசானது வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை ரப்பர்களின் கலால் வரியை உயர்த்தியும், செயற்கை ரப்பர் இறக்குமதி க்கு முழுவதுமாக தடைவிதித்தும் நம் விவசாயிகளின் நலனில் முனைப்பு காட்டி நலிவடைந்த விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை மீட்டுருவாக்கம் செய்ய ஆவன செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.