நாகர்கோவில், ஆக.6- குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதி யைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நாஞ்சில் முரு கேசன் சிகிச்சை முடிந்து சிறையில் அடைக் கப்பட்டார். குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளி டம் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில். நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசா ரணை நடத்தி, நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக அவர் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து நாஞ்சில் முருகேசன், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட் டார்.
இதற்கிடையில் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார், சிறுமியை வல்லுறவு செய்த நாகர்கோவில் குளத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலு (66), கோட்டார் கம்பளத்தை சேர்ந்த அசோக்குமார் (43), உறவினர் கார்த்திக் (23) ஆகிய 4 பேரை யும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறை வான நாஞ்சில் முருகேசனை நெல்லை மாவட்டத்தின் கடைகுளம் காட்டு பங்களா விலிருந்து காவல்துறையினர் கைது செய்து, ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் குறைவானதால் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி 6 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் புதனன்று நாஞ்சில் முரு கேசனின் உடல்நிலை சரியானதாக மருத்து வமனை நிர்வாகம் கூறியதால் அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்பு நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.