நாகர்கோவில், மே.26- கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் ராஜன். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் அந்தோணி அடி மையுடன் மார்த்தாண்டம் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அந்தோணி அடிமை இருசக்கர வாக னத்தை ஓட்ட, சதீஷ் ராஜன் பின்னால் அமர்ந்து இருந்தார். இவர்களின் இரு சக்கர வாகனம் தேங்காப்பட்டணம் பெட்ரோல் பல்க் அருகே வந்த போது, லாரி ஒன்றை முந்தி செல்வதற்காக வேகமாக சென்றனர். அதே நேரத்தில் எதிரே தண்ணீர் பாட்டில் கள் ஏற்றி வந்த மினி டெம்போவில் இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ் ராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகா யங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்தோணி அடிமை பொதுமக்களால் மீட்கப்பட்டு மார்த்தா ண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுக்கடை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, சதீஷ் ராஜன் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.