tamilnadu

img

வாலிபர் சங்க குமரி மாவட்ட நிர்வாகிகளுக்கு சிறந்த ரத்தக் கொடையாளர் விருது

நாகர்கோவில், அக்.26- தேசிய தன்னார்வலர் ரத்த  தான விழா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியில் நடைபெற்றது.  விழாவுக்கு, மரு த்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜி நாதன் தலைமை வகித்தார். மருத்து வர் ஆறுமுக வேலன் வரவே ற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாத், மருத்துவர் வி.அருள் பிரகாஷ் ஆகியோர் பேசினர். இரத்த வங்கி அலுவலர் கரோலின் கீதா நன்றி கூறினார்.  இதில், சிறந்த இரத்த தான கொடையாளர்களுக்கான விருது இந்திய ஜனநாயக வா லிபர் சங்கம் உள்ளி ட்ட பல்வேறு தன்னார்வ இரத்ததான அமை ப்புகளுக்கு வழங்கப்பட்டது. விழாவில், இந்திய ஜனநா யக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட், நிர்வாகிகள் காட்ஸே, கா ஸ்ட்ரோ உட்பட பலர் கலந்து  கொண்டனர்.