tamilnadu

img

கோவிட் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட களப்பணியாளர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி

குழித்துறை, மே 19- கன்னியாகுமரி மாவட்டத்தில் கொ ரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி களை வழங்கியும், தூய்மைப் பணிகளி லும் தொடர்ந்து ஒன்றரை மாதம் ஈடு பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க த்தினருக்கு குழித்துறையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. குழித்துறை அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உடன் இருப்போர், சுகாதாரப் பணியா ளர்கள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு தொடர்ந்து   43 நாட்கள் மதிய உணவு  வழங்கப்பட்டது. மொத்தமாக 15007 மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப் பட்டுள்ளது. இதில் உணவு சேகரிப்பது, உணவு தயாரிப்பது,  வினியோகிப்பது மற்றும் துய்மை பணிகளிலும் 300 க்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

அவர்க ளுக்கு பாரட்டு தெரிவிக்கும் நிகழ்வு செவ்வாயன்று குழித்துறையில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் எட்வின்பிரைட் தலைமை தாங்கி னார். மாநில தலைவர் ரெஜீஸ்குமார், முன்னாள் தலைவர்கள் ஆர்.செல்ல சுவாமி, கே.மாதவன், ஏ.வி.பெல்லார்மின்,  வி.அனந்தசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு களப்பணியா ளர்களுக்கு கைத்தறி துண்டு அணிவித்து  பாராட்டினர். மாவட்ட பொருளாளர் ரெ திஷ் மற்றம் மாவட்ட, வட்ட நிர்வாகி கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். உணவு வழங்க உதவிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு வாலி பர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கபட்டது.