tamilnadu

மீன்பிடி உரிமை வழங்கக் கோரி உள்நாட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், பிப்.8- தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரி கள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்நாட்டு மீனவர்கள் மீன் வளர்த்து அந்த வருவாயில் தங்கள்  வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நீர்நிலைகளில் மீன் பிடிக்கும் உரி மையை இடைத்தரகர்கள் இடையில் புகுந்து பறிக்காமல் இருக்க தமிழக அரசு  உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க ங்கள் மூலம் மீன் வளர்த்து அவற்றை பிடி த்து விற்கும் உரிமையை உள்நாட்டு மீன வர்களுக்கு அளித்து வந்தது. ஆனால் தற்போது ஆளும் அதிமுக அரசு வேறு  வருமானமோ, வேலையோ அற்ற உள்நாட்டு மீனவர்களின் வயிற்றில் அடி க்கும் வகையில் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மீன் பிடிக்கும் உரி மையை பொதுப்பணித் துறை ஏலம் மூலம் தனிநபர்களுக்கு வழங்க அரசா ணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து உள்நாட்டு மீனவர்கள் சென்னை உயர்நீ திமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இடைக்கால உத்தரவும் பெறப்பட்டது. ஆனால் தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இடைக்கால உத்தரவின் பே ரில் உள்நாட்டு மீனவர்கள் கடனை வாங்கி குளத்தில் மீன் வளர்த்து வரும் நிலையில் சில தனிநபர்கள் திருட்டுத்த னமாக மீன்களை பிடித்து செல்வதா லும், பிப்ரவரி மாத இறுதியில் அணை கள் மூடப்படுவதால் குளத்தில் உள்ள மீன்கள் செத்து போகும் நிலை ஏற்படு வதாலும் உள்நாட்டு மீனவர்கள் கடனில்  மூழ்கி தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே உள்நாட்டு மீனவர் கூட்டுறவு  சங்கங்களுக்கு மீன் வளர்த்து மீன் பிடி க்கும் உரிமையை தமிழக அரசு மறு ப்பதை கண்டித்தும், உள்நாட்டு மீனவர்  கூட்டுறவு சங்கங்கள் குளங்களில் வள ர்த்த மீனை திருட்டு போகாமல் பிடிக்க  உடனடியாக அனுமதி வழங்க வலியு றுத்தியும் வெள்ளியன்று கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகஸ்தீஸ்வரம்-தோவாளை உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு குழு  சார்பில் உள்நாட்டு மீனவர்கள் குடும்ப மாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ஜி.செலஸ்டின் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நூர்முக மது, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா ளர் எஸ்.அந்தோணி, முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின், மறுமலர்ச்சி மீனவர்  அணி நிர்வாகி நெல்சன்,  தாமஸ், புல மாடன், மைக்கேல்ராஜ் ஆகியோர் பேசி னர்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி, சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.தங்கமோகன், மாவட்ட துணைத் தலைவர் சுகுமாரன், கன்னி யாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க  மாவட்டத் தலைவர் கே.அலெ க்ஸாண்டர், நிர்வாகி மரிய ஜார்ஜ், உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பாளர் இசக்கி முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.