நாகர்கோவில், மே 21- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை உடனடி யாக வழங்க வேண்டும், சர்வ தேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானத்தை மதித்து வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், சிஎல்ஆர் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் வியா ழனன்று நாகர்கோவில் பிஎஸ் என்எல் பொதுமேலாளர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜார்ஜ் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் பி.ராஜூ பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், சின்னத்துரை, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க நிர்வாகி மீனா ட்சி சுந்தரம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.