நாகர்கோவில், ஆக.11- குமரி மாவட்டம் நாகர் கோவில் பகுதியில் புத்தேரி குளம் உள்ளது. இந்த குளத்தின் கரை யோரத்தில் உள்ள கலுங்கடி ஊர் கல்லறைத் தோட்டத்தில் இறந்த வர்கள் அடக்கம் செய்யப்பட்ட ஏராளமான கல்லறைகள் உள் ளன. இதில் இறந்த மூதாதையர் களின் கல்லறைகளில் மெழுகு வர்த்தி ஏந்தி அப்பகுதி மக்கள் வழி படுவது வழக்கம். இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதி யில் கழிவுகளை அப்புறப்படுத் தும் ஒப்பந்ததாரர்கள், கழிவு களை லாரி லாரியாக கொண்டு வந்து இந்த கல்லறைகளின் மீது கொட்டிவருகின்றனர். இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரளமான கிராமமக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படும் அபா யம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று இந்த குளத்தில் தினமும் ஏராளமானோர் குளித்து வருவ தால் அவர்களுக்கும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்பகுதியில் வரும் கழிவு லாரிகளை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கலுங்கடி கிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ள னர்.