நாகர்கோவில், ஜூலை 9- நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளின் சுவரொட்டி களை ஒட்டக்கூடாது என்கிற மாநகராட்சி ஆணையரின் அறிவிப்பை ரத்து செய்யுமாறு அனைத்து கட்சிகள் கூட்டம் வலியுறுத்தியுள்ளது. நாகர்கோவில் ஒழுகினசேரி திமுக அலுவல கத்தில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடை பெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், எம்.அகமது உசேன், மாநகர செயலாளர் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், திமுக சட்ட மன்ற உறுப்பினர் ஆஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
கூட்டத்தில், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக ளின் சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என்ற மாநக ராட்சி ஆணையரின் தடையை திரும்ப பெற வேண்டும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை உட்பட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், வெளியூர்களிலிருந்து ரயில்கள் மூலம் வரும் பயணிகள், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் களியக்காவிளை பகுதிகளில் வரும் பயணிகளுக்கு பேருந்து, ரயில் கட்டணங்களை பயணிகளிடம் வசூலிக்காமல் அரசே ஏற்க வேண்டும், ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரமுடியாமல் தவிக்கும் மீனவர்களை தனி விமானம் மூலம் மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.