tamilnadu

img

தோழர் ஸ்ரீதரன் நினைவு தினம்

அருமனை, ஆக.2- கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே அண்டுகோடு பகுதியில் மக்களின் நன் மதிப்பை பெற்ற தோழா் ஸ்ரீதர னின் ஆறாம் ஆண்டு நினைவு தினமான ஞாயிறன்று அவரது நினைவிடத்தில் மலர் கொத்து டன் நினைவஞ்சலி செலுத்தினர். பத்திர பதிவு எழுத்தாளராக பணியாற்றிக் கொண்டே மக்கள் பணியாற்றிய ஸ்ரீதரன் இடைக் கோடு பேரூராட்சியில் கவுன் சிலர், துணை தலைவர், தலைவர் என உயர்ந்தார். தொடர்ச்சியாக அண்டுகோடு கூட்டுறவு சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இவரது தந்தை அண்டுகோடு கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கு இலவசமாக நிலத்தை வழங்கினார். இவா் அண்டுகோடு கிராம அலுவல கம் மற்றும் பேரூராட்சி சமூக நலக்கூடம் அமைக்க இலவச மாக நிலத்தை வழங்கினார்.   தோழர் ஸ்ரீதரன் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் புறம் வட்டாரக்குழு சார்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டாரச் செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். மூத்த தோழா் தங் கப்பன் கொடியேற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினா் ஆா்.லீமாறோஸ், பாகோடு கூட்டுறவு சங்க தலைவர் டி.வின்சென்ட், அண்டுகோடு கூட்டுறவு சங்க தலைவர் அனூப் (தோழர் ஸ்ரீதர னின் மகன்) குடும்பத்தார் மற்றும் சிபிஎம் வட்டாரக்குழு உறுப்பி னர்கள், கிளை தோழா்கள் உட்பட ஏராளமானோர் நினைவஞ்சலி செலுத்தினார்கள்.