நாகர்கோவில், ஜூன் 2- கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் 17 வயது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தக்கலை அரசு மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியை ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். திங்க ளன்று மாலை அந்த சிறுமி ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமி 4-மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற மகளிர் காவல் துறையினர் அந்த சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தினர். அதன்படி, அந்த சிறுமியின் கர்ப்பத் துக்கு காரணமான கல்லூரி மாணவர் சஞ்சீவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவி ஆசா ரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.