tamilnadu

ஆட்சியர் எச்சரிக்கை

நாகர்கோவில், ஜூன் 6-கன்னியாகுமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் குறித்த வதந்திகளைபொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேசெய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நிபா வைரசை கட்டுப்படுத்த 150தனியார் மருத்துவமனைகளிலும், 12 அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் காரணமாக வருபவர்களைதீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருசில இடங்களில்சாதாரண காய்ச்சல், சளி, இருமல் ஆகியவைகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நிபா வைரஸ்எதுவும் இல்லை. கடந்த ஆண்டும்கன்னியாகுமரி மாவட்டத்தை நிபாவைரஸ் தாக்கவில்லை. இந்தஆண்டும்நிபா வைரஸ் தாக்காமல் இருக்க பொதுமக்களாகிய நீங்கள்ஒத்துழைப்பு நல்கி, நிபா வைரஸ் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.