tamilnadu

கல்லறை தோட்டத்தை சூறையாடிய கடல் சீற்றம் 10 வீடுகள் நாசம்; அழிக்காலில் ஒருவர் மரணம்

 நாகர்கோவில், ஆக.10- குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்க ளாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடற்கரை அருகே உள்ள மீனவர் குடியிருப்பு களில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. அழிக்கால் பகுதியில் ஏற்க னவே கடல் சீற்றம் காரணமாக பக்க சுவர் இடிந்து விழுந்து ஒரு இளைஞர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். ஒருவர் படுகாய மடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த நிலையில்  தேங்காய்பட்டணம் அருகே ஹெலன் நகர் பகுதியில் கடல் சீற்றத்தால் 10 வீடுகள் கடல் அலையில் இடித்து தள்ளபட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்தில் உயிர் இழப்பவர்களை அடக்கம் செய்யும் கல்லறை தோட்டத்தை யும் கடல் அலை அரித்து சென்றுள்ளது.

இந்த கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பிணங்களை கடல் அலை இழுத்து சென்றதுடன் இந்த குடியிருப்புகளின் முன்புறம் நின்ற தென்னை உட்பட பல்வேறு மரங்களையும் இழுத்து சென்றது.  இதனால் இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மேலும் குடி யிருப்புகள் பாதிக்காமல் இருக்கவும் கல்லறை தோட்டம் பாதிக்காமல் இருக்கவும் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலை யில் இந்த பகுதியில் உடனடியாக போர்கால அடிப்படை யில் கடல் அலை தடுப்பு சுவர் அமைத்து இந்த மீனவ மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.