ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிதம்பரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.ஆர். பாண்டியன் கலந்து கொண்டு 198 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இளங்கோவன்,மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமாறன், சிதம்பரம் நகரச் செயலாளர் செந்தில்குமார் பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.