tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆவேசப் போராட்டம்

கடலூர், மே 31- கொரோனா ஊரடங்கு  காலத்திற்கு அரசு உத்த ரவுப்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு  விடுப்பு ஊதியம் வழங்க  வேண்டும், தொழிலாளர்க ளின் சொந்த விடுப்பில் கழிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு, தொமுச  உள்ளிட்ட தொழிற்சங்கங்க ளின் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு 2ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் கிருஷ்ண கிரி பணிமனையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐ டியு நிர்வாகிகள் உமர் பாருக், ஜான் லூயிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி புறநகர் பணிமனையில் சிஐ டியு நிர்வாகி சுப்ரமணி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தியாக ராஜன், நஞ்சுண்ட செட்டி, குணசேகர் (சிஐடியு), சோமசேகர், ராமமூர்த்தி (தொமுச), பெருமாள் (பணி யாளர்கள் சங்கம்), மூர்த்தி (அம்பேத்கர் சங்கம்) உள்  ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். கிருஷ்ணகிரி திமுக சட்ட மன்ற உறுப்பினர் செங்குட்டு வன் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார்.

;