tamilnadu

img

சுடுகாட்டுக்கு பாதை, கூரையுடன் தகன மேடை அமைக்கக்கோரிக்கை

சிதம்பரம், மார்ச் 14- திருத்துறையூர் சின்ன பேட்டை சுடு காட்டுக்கு பாதை, கூரை வசதியுடன் தகன மேடை அமைக்கக்கோரியும்   மெயின் ரோட்  டில் பாலம் அமைக்க கோரியும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.  அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் ஆர்.லோகநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில  குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட குழு  உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப் புரை ஆற்றினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆதவன், முருகன், வெங்கடேசன் ,நாராயணன், தமிழ்ச்செல்வன் ,அம்பிகாபதி, கலியபெரு மாள், பரசுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநில  தலைவர் எஸ்.வாலன்டினா பேசுகை யில்,  100 நாள் திட்டத்தில் 40,000 கோடி  ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்ப தாக செய்தி வருகிறது, அந்த திட்டத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சித்து வருகி றது. 100 நாள் வேலைத்திட்டத்தை 250 நாட்கள்  ஆக உயர்த்தி தினம் 600 ரூபாய் கூலி வழங்க  வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகி றோம் என்றார். வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தெருவிளக்கு, மின்சார வசதி செய்து கொடுக்க கோரியும், அக்கடவல்லி ஊராட்சி யில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளுக்கு நீதி விசாரணை நடத்தக் கோரியும் ,சின்னப் பேட்டை கோயில் இடத்தில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க இந்தகூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.