சிதம்பரம், அக். 5- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி 33 வார்டு பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு 1969 ஆம் ஆண்டு முதன் முதலில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரபெற்று அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் அத்திட்டம் வடிவமைக்கப்பட்டு தற்போது வரை செயல் பாட்டில் உள்ளது. நகரின் மக்கள் தொகைக்கு ஏற்றார் போல் தற்போது செயல்பட்டு வரும் இத்திட்டம் போதுமானதாக இல்லாத காரணத்தினால் புதிய பாதாள சாக்கடை திட்டம் அமைக்க கடந்த திமுக ஆட்சிகாலத்தில் அப்போதைய சிதம்பரம் நகர் மன்ற தலைவராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த பவுஜியாபேகம் ரூ.44 கோடிக்கு அனுமதி அளித்தார். மதிப்பீடு குறை வாக உள்ளது என்று ஒப்பந் தம் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு ரூ.75 கோடி மதிப்பில் திட்டத்தை செயல் படுத்தப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரி யத்தின் மூலம் பணிகள் நடை பெற்று வருகின்றது. இப்பணி கள் தற்போது முடியும் தருவா யில் உள்ளது. தற்பொது இயங்கி வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் நகரின் 31 வார்டு பகுதிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. புதிய பாதாள சாக்கடை திட்டம் நகரின் 33 வார்டு பகுதிகளிலும் செயல்படும். இந்த பணியை ஒரு மாத காலத்திற்குள் முடித்திட நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகராட்சி பொறியாளர் மகாதேவன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறி யாளர் மதியழகன் மற்றும் அதிகாரிகளிடம் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் பாண் டியன் வலியுறுத்தினார். இதனைதொடர்ந்து மணலூரில் அமைக்கப் பட்டுள்ள பாதளசாக் கடை திட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை எம்எல்ஏ பாண்டியன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.