மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று கையெழுத்து இயக்க போராட்டத்தை துவங்கி உள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ள மோடி அரசு, ஜூலை 31க்குள் கருத்து தெரிவிக்குமாறு கெடு விதித்துள் ளது. இந்தியக் கல்வியை முற்றிலும் சீர்குலைக்கும் இந்த வரைவு கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு இயக்கம் வலுத்து வருகிறது.
மத்திய பாஜக அரசு வெளியிட்டுள்ள தேசிய வரைவு கல்விக் கொள்கை முற்றிலும் ஆபத்தான அம்சங்களை கொண்டுள்ளது என்றும் இதை தற்போதைய அதே வடிவத்தில் ஏற்றுக் கொள்ள முடி யாது என்றும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்தும் அதில் உள்ள ஆபத்தான அம்சங்களை அம்பலப்படுத்தியும் மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளும் விதத்தில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் கையெழுத்து இயக்கத்தையும் தெரு முனைப் பிரச்சார இயக்கதையும் இன்று துவக்கி நடத்தி வருகிறது.
இந்த கையெழுத்து இயக்கம் சென்னை பாரி முனையில் இன்று நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கடலூர் அண்ணா பாலம் அருகே நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கப் போராட்டத்தில்்த வணிகர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் புதிய கல்விக் கொள்கை குறித்து பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கையெழுத்து வாங்கினர். இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டனர்.