கடலூர். பிப். 13- கடலூர் மாவட்டம் சிதம் பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் வசித்த ஆதி திராவிடர் மக்கள் 11 பேருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை யின் சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டா வாங்கியவர்கள் சரி யான பொருளாதார வசதி இல்லாததால் அந்த இடத்தில் வீடுகட்டுவதற்கு தாமதம் ஆனது. இதனால் சில ஆண்டுகளாக அந்த மனைகள் காலியாக இருந்தது. காலியாக இருந்த அந்த இடத்தில் மாற்று சமூகத்தி னர் சிலர் மாடி வீடுகளைக் கட்டிக் கொண்டு வசித்து வந்தனர். கடந்த 15 ஆண்டு களுக்கும் மேலாக எங்களது பட்டா இடங்களை மீட்டுத் தாருங்கள் என பாதிக்கப் பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடம் புகார் கொடுத்து வந்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் அந்த இடத்தை மீட்டு பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு வழங்கும்படி தீர்ப்பு அளித்தது. இதையடுத்து மாற்று சமூகத்தினர் கட்டி யிருந்த வீடுகளை அகற்றும் பணி காவல் துறையினரின் உதவியுடன் வியாழனன்று (பிப். 13) நடைபெற்றது. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த பிரச்சனை முடி வுக்கு வந்தது. மேலும் முன்ன தாக இந்த பகுதியில் வசித்து வந்த மாற்று சமூகத்தின ருக்கு புவனகிரி வட்டாட்சி யர் தலா 3 சென்ட் வீட்டு மனையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.