tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கருத்தரங்கம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ரம்ஜான்தைக்கால் பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கருத்தரங்கம் மாவட்டச் செயலாளர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடுகளின் ஆபத்துகளை  பெண்களிடம் விளக்கிப் பேசினார். இதனைத்தொடர்ந்து மாதர் சங்கத் தலைவர் ஷாஜாதி நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.