குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரத்தில் கையெழுத்து இயக்கம் திமுக மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா, சிபிஐ மாவட்டச் செயலாளர் மணிவாசகம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பெரியசாமி, விசிக மாவட்டச் செயலாளர் அறவாழி, மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
**************
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டீக்கா ராமன், சிபிஐ செயலாளர் செயலாளர் சிம்புதேவன், விசிக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் நீல.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
**************
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன், திமுக ஒன்றியச் செயலாளர் கே.வி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, கெடிலம் ஆகிய இடங்களிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
**************
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், திமுக நகரச் செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம்பாஷா, மாவட்டத் தலைவர் நசீர்அஹ்மத், மாவட்ட துணைச் செயலாளர் தப்ரேஸ்அஹ்மத், ஆகியோர் கலந்து கொண்டனர்.
**************
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவண்ணாமலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
**************