tamilnadu

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கருத்தரங்கம்

சிதம்பரம்,செப்.16- தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து சமூக சிந்தனையாளர் பேரவை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக  அகில இந்திய செயலாளர் அண்ணாமலை, தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சிறப்பு தலைவர் சுப்பிர மணியன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தை சார்ந்த அறவாழி உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.   இந்த வரைவு கொள்கை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியது என்றும், ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை, சமூக நீதி, அரசியல் நீதி பொருளாதார நீதி இவை களுக்கு எதிரான ஒன்றாக உள்ளது என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமூக சிந்தனையாளர் பேரவை துணைத் தலைவர் செல்வ நாதன்  நன்றி கூறினார்.முன்ன தாக சமூக சிந்தனையாளர் பேரவை பொருளாளர் ராக வேந்திரன் வரவேற்றார்.

;