சிதம்பரம்,ஏப்.16- சிதம்பரம்(தனி) மக்களவைத் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு வாக்குகள் கேட்டு சேத்தியாத்தோப்பில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் பூ.சி இளங்கோவன் தலைமை வகித்தார். திராவிடக் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புவனகிரி தொகுதி எம்எல்ஏ சரவணன், சேத்தியாத் தோப்பு நகரச் செயலாளர் மனோகரன், ஒன்றியச் செயலாளர் முருகன், மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பூபாலன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வீரசோழன், தி.க மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ் திலீபன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விக்கிரவாண்டியில் பிரச்சாரம் நிறைவு செய்யப்பட்டது. வடக்கு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜெயசந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.