tamilnadu

img

தடுப்புகளை அகற்றக் கோரி குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூலை 25- ரயில்வே நிர்வாகம் சாலையை தடுத்து ஏற்ப டுத்தி உள்ள தடுப்புகளை அகற்றக் கோரி குடியிருப் போர்  சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வரும்  சாலையில் ரயில்வே ஏற்ப டுத்தியுள்ள தடுப்பை பயணி கள், வியாபாரிகள், கர்ப்பி ணிப் பெண்கள் நலன் கருதி  உடனடியாக அகற்ற  வேண்டும். திருப்பாதிரிபுலி யூர் ரயில் நிலையத்திற்கு வரும் சாலையில் ஏற்கனவே  இருந்தது போல் 20 அடி  சாலை அமைக்க வேண்டும். நகராட்சி பிரசவ மருத்து வமனைக்குச் செல்லும் வகையில் இந்த சாலை இருக்க வேண்டும்.  திருப்பா திரிப்புலியூர் ரயில் நிலை யத்தின் பெயரை பயணிகள்  நலன் கருதி கடலூர் திருப்  பாதிரிபுலியூர் அல்லது கடலூர் டவுன் என்று மாற்ற  வேண்டும்,   பெங்களூர் செல்  லும் ரயில் திருப்பாதிரிப்புலி யூர் வந்து செல்ல வேண்டும், பாண்டி விழுப்புரம் திருப்  பாதிரிபுலியூர் முதுநகர் வழி யாக கோயம்புத்தூருக்கு ரயில் சேவையை துவக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப் பாட்டத்திற்கு கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர்  பி.வெங்கடேசன் தலைமை  தாங்கினார். பொதுச்செய லாளர் எம்.மருதவாணன், நிர்வாகிகள்  ரமணி, கல்யாண குமார், ராதாகிருஷ்ணன், சரவணன், செல்வகணபதி, பன்னீர்செல்வம், இளங் கோவன், தேவநாதன், ரங்க நாதன், செல்வராஜ் உள்  ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். பொருளாளர் சுகுமாறன்  நன்றி கூறினார்.