tamilnadu

img

தொடர் மழையால் கிராமத்தை சூழ்ந்த மழைநீர்

சிதம்பரம், டிச. 2- கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கடலூர் உள்ளிட்ட டெல்டா பகுதியில் கடந்த  5 நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகி றது. இதனால் மாவட்டத்தில் உள்ள  ஏரி மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.  மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம்ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன  அடி மழை தண்ணீரை பொதுப்  பணித்துறையினர் வெளியேற்றி வருகிறார்கள். இதனால் காட்டு மன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூர் லால்பேட்டை, சிற கிழந்த நல்லூர், குமராட்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. வாய்க்கால் ஓரங்களில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இவர்களை அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் மற்றும் பள்ளிகளில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். மேலும் திங்க ளன்று தண்ணீரின் அளவை 4ஆயி ரம் கனஅடியாக குறைந்துள்ளதாக பொதுப்பணித் துறையினர் கூறினர். இதனிடையே சிதம்பரம் நகரம் 33 வது வார்டில் உள்ள ரயிலடி இந்திரா  நகர் வீராணம் தண்ணீர் செல்லும் பாலமான் வாய்க்கால் கரையில் உள்ளதால் அந்த பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நக ரச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் முத்து, கோபால் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆறுதல் கூறியதோடு தேவை யான உதவிகள் செய்தனர். பெண்ணாடம் பகுதியில் பெய்து  வரும் கன மழையால், ஓடைகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெலாந் துறை அணை 7 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் 650 கன அடி  தண்ணீர் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது. இந்த ஆண்டில் 2 வது  முறையாக அணை நிரம்பியுள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

120 வீடுகள் சேதம்
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்  வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி யிருப்பதோடு, பல்வேறு வீடுக ளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள் ளது. மாவட்டம் முழுவதும் 116 வீடு கள் சேதமடைந்திருப்பதாக வரு வாய்த்துறை வட்டாரங்கள் தகவல்  தெரிவிக்கின்றன. இதில் 6 குடிசை வீடு கள் முழுமையாக சேதமடைந்துள் ளது. 99 வீடுகள் பகுதி சேதத்தை சந்தித்துள்ளது. ஓட்டு வீடுகளைப் பொறுத்தவரையில் 11 வீடுகள் சேத மடைந்தன. மழைக்கு பின்னர் விரிவான கணக்கெடுப்பு நடத்த வரு வாய்த்துறையினருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. முழு சேதத்திற்கு  ரூ.5 ஆயிரமும், பகுதி சேதத்திற்கு ரூ.4,200ம் நிவாரணமாக வழங்கப்ப டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் மழைநீர் தேங்கியிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பேரிடர் நிகழ்ந்தாலோ 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆட்சியரக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
திருவண்ணாமலை
தொடர்மழையால் திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி சுற்று வட்டாரத்தில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதை யடுத்து, மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட் டதுடன், சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்  கனிக்கோட்டை, சூளகிரி, கெலமங்க லம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் 4 ஆயிரம் ஹெக்டேர் கேழ்வரகு பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.