சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளின் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார், முதல்வர் ரூபியாள்ராணி, குமராட்சி வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கினர்.