tamilnadu

ரசாயன புகையுடன் அல்லல்படும் ஆலை தொழிலாளர்கள்

கடலூர், ஜூலை 23- கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டாக்ரோஸ் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்து வதை காலம் கடத்திக் கொண்டு வருவதை  கண்டித்து கடலூர் முதுநகரில் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது. ரசாயன புகையுடன் நாள்தோறும் அல்லல்படும் தொழிலாளர் களுக்கு நியாய மான சம்பள உயர்வு வழங்கக் கோரியும், தொழிலாளி யின் உழைப்பால் உயர்ந்த நிர்வாகம் தொழிலாளியை வஞ்சிப்பதையும், நியாயமான சம்பள உயர்வு வழங்க மறுப்  பதை கண்டித்தும், தொழிலாளர் துறையும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு பிரச்ச னையை பேசி தீர்க்க வலியுறுத்தியும் சிஐடியு  டாக்ரோஸ் சிப்காட் சங்கம் சார்பில் போராட்  டம் நடைபெற்றது.  சங்கத்தின் தலைவர் பி. குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.தேவநாதன், என்.திருமால். ஏ.ஜெயக் குமார், ஜே.ஆனந்தபாஸ்கர், எம்.சச்சிதா னந்தம், கே.சரவணன் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.பழனி வேல் துவக்கி வைத்தும், மாவட்டச் செய லாளர் பி.கருப்பையன் முடித்து வைத்தும் உரையாற்றினர். சிஐடியு சிப்காட் தலைவர்  ஆர்.ஆளவந்தார், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பாபு,  மாவட்ட  இணைச் செயலாளர் வி.சுப்புராயன், கட்டு மான சங்க மாவட்டச் செயலாளர்  வி.கிருஷ்ண மூர்த்தி, வீட்டு வேலை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சாந்தகுமாரி,  மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநிலக்  குழு உறுப்பினர் வி.அனந்த நாராயணன்,  கைத்தறி தொழிலாளர் சங்கச் மாவட்டச் செய லாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, சிப்காட் செய லாளர் முத்து, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ராஜேந்திரன்,  சாலை யோர வியாபாரிகள் சங்க மாநில ஒருங்கி ணைப்புக் குழு உறுப்பினர் எஸ். அல்லா பிச்சை, டான்பாக் சங்க செயலாளர் ஆர்.ஜீவானந்தம்,  பொருளாளர் ஜி.குமார், கிளாரி யன்ட் தலைவர் வி.ஜானகிராமன், பொருளா ளர் எம்.சிவானந்தம், சங்கத் தலைவர் எம்.கோபு, செயலாளர் டி.வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கப் பொருளாளர் ஆர்.கோவிந்தன் நன்றி கூறினார்.