சிதம்பரம், டிச.5- கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட ஆயிப்பேட்டை கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிரா மத்தில் மழைத் தண்ணீர் வடிய முறையான வடிகால் வசதி கிடையாது. இதனால் குடி யிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து வீடுகளில் சேரும் சகதியுமாக மாறியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு தெரிவித்தும் கண்டுகொள்ள வில்லை. ஆத்திரமடைந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சி நாதன் தலைமையில் சிதம்பரம் - சேத்தியா தோப்பு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் கீரப்பாளையம் ஒன்றியப் பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், மழை நீர் வடிய வடிகால் அமைத்து கொடுக் கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், நெடுஞ்சேர லாதன். கிளைச் செயலாளர் கனகராஜ் உள் ளிட்ட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.