tamilnadu

கடலூரில் பி.சி.ஆர் பரிசோதனையை அதிகப்படுத்துக: சிபிஎம் கோரிக்கை

கடலூர், ஜூலை 4- கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்து வரும் நிலையில் உடனுக்குடன் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று மார்க்அசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் டி.ஆறுமுகம் ஆட்சியரிடம் அளித் துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். பிசிஆர் பரிசோதனை முடிவு களை அறிவிக்கும் கருவிகளை கூடுதலாக கட லூர் சிதம்பரத்தில் அமைக்க வேண்டும். கூடு தல் தொழில்நுட்ப பணியாளர்களை நிய மிக்க வேண்டும். கல்விக் கட்டணத்தை செலுத்த கட்டாயப்ப டுத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீதும்,  அரசு விதிமுறையை மீறி மாணவர் சேர்க் கையை நடத்தும் கல்வி நிலையங்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா  காலத்தில் குடும்ப வன்முறை சம்பந்தமாக மகளிர் காவல் நிலையத்தில், சமூக நல அலுவ லகத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு போர்க்கால அடிப்  படையில் வீராணம் ஏரியிலிருந்து ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து, கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய  வேண்டும். நகராட்சி கடைகளுக்கு வாடகை யில் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. முன்னதாக மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம், மாநிலக் குழு உறுப்பினர், கோ.மாத வன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் ஆகி யோர் புதிதாக பெறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரேயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.