கடலூர், ஆக. 19- ஊராட்சிகளின் சட்டப்புத்தகத்தை தமிழில் வழங்க வேண்டுமென பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்ட மைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலை வர் வசந்தகுமாரி ஜெயராமன் தலைமை யில் கடலூரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஊராட்சிகளில் 14, 15ஆவது நிதிக்குழு மானியம், நூறுநாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பணிகளில் அரசியல் தலையீடு இல்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும், தலைவர்களுக்கான உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், அதிகாரம் சம்பந்த மாக தெளிவுபெற வழங்கிய சட்டப் புத்தகம் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளதை மாற்றி தமிழில் வழங்க வேண்டும். கொரோனா தடுப்புப்பணியாக மாவட்ட நிர்வாகம் அவ்வப் போது அறிவித்த பணிகளை செய்து முடித்துள்ள நிலையில் ஊராட்சி நிதியில் போதிய நிதி இருப்பு இல்லாததால் செல விட்ட தொகையை மீள்பெற இயல வில்லை.
எனவே, ஊராட்சி கணக்குகளின் மீது ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் ஆட்சியரால் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் வீட்டுமனைகள், விற்பனைக்கான மனை களை வரன்முறைப்படுத்தி அதிகாரம் வழங் கும் போது ஊராட்சிமன்றத் தலைவரின் அனு மதியைப் பெற வேண்டும். ஊராட்சி பணி யாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் மற்றும் படி கள் வழங்க போதிய நிதிஒதுக்க வேண்டும். என்எல்சியை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகள் மூலமாக நிலத்தடிநீர் உறிஞ் சப்படுவதால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக் குறையை போக்க அந்த நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஆர்) பெற்று அனைத்து ஊராட்சிகளிலும் புதிதாக ஆழ்துளை குடிநீர் குழாய் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.